அமாவாஸை தினங்களில், தர்ப்பணம் பண்ணுபவர்கள் அகத்தில், பெருமாள் திருவாதனத்திற்கு பயத்தம்பருப்பு, சுண்டைக்காய் குழம்பு பண்ணுவது உண்டு. ஆனால் சில அமாவாஸை தினங்களில் (ஐப்பசி, தை) துவரம் பருப்பு மற்றும் மோர்க்குழம்பு பண்ணுவது உண்டு. இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாஸை தவிர வேறு மாதங்கள் ஏதேனும் உண்டா என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

ஆடி அமாவாஸை தினத்தை பண்டிகையாக கொண்டாடுவது சிலர் உண்டு, மேலும் ஆசார்யர்கள் திருநக்ஷத்ர தினம் அமாவாஸை அன்று வந்தாலும் திருநக்ஷத்ரமாக கொண்டாடும் போதும், அகத்தில் உள்ளவர்களின் பிறந்தநாள் வந்தாலும் பண்டிகைப் போன்ற தளிகைச் செய்வதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top