சுமார் 800 வருடங்களுக்கு முன், பிள்ளைப்பெருமாள் ஐங்கார் என்பவர் முதலில் 108 திருப்பதி அந்தாதி என்று சாதித்தார். அது தொடக்கமாக தான் 108 என்ற கணக்கு ஆரம்பமாயிற்று என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அதற்கு முன் இப்படி கணக்கு இட்டோ பட்டியலிட்டோ இருந்ததாக தெரியவில்லை. அவருக்குப் பின் 108 திவ்ய தேசங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. இக்கணக்குகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டும் இருக்கும். அந்த ரிதீயில் ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலம் என நாமும் கணக்கு செய்யலாம். ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டதேன்றி இப்படித்தான் என்ற நிர்பந்தம் ஏதும் கிடையாது.
உதாஹரணமாக திருநாராயணபுரம், காஞ்சி வரதராஜ பெராள் கோவில் இவைகளை 108ல் சேர்க்கலாமா என்பதாக அக்காலத்தில் சர்ச்சைகளும் எழுந்தன என்பர்.