ஒரு மாதத்தில் இரண்டு ஶ்ராத்த திதி வரும் போது, இரண்டாவது திதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும் முதல் திதியை ஸூன்ய திதி என்று குறிப்பிடுவார்கள். பின்பு வரும் திதிக்கு தோஷமிருந்தால், உதாஹராணமாக சங்க்ரமண, க்ரஹன தோஷம் போன்றவை இருந்தால் அப்போது முன்புள்ள திதியை ஶ்ராத்த திதியாக கொள்ள வேண்டும், பின்புள்ள திதியை ஸூன்ய திதி என்பர்.
அதிதி என்பது அபராஹ்ன வ்யாப்தியைக் குறித்துச் சொல்லப்படுவது. அது உதாஹரண பூர்வகமாகச் சொன்னாலே புரியும். ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய “ஆஹ்நிகத்தின்” அனுபந்தத்தில் உதாஹரணத்தோடு நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. கண்டு தெளிந்து கொள்ளவும்.
குறிப்புகள்
தற்போது ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்த காலக்ஷேபம் (உபனயநம் மற்றும் ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்களுக்கு மட்டும்) GSPKயில் தொடங்கியிருக்கிறது. விருப்பம் இருப்பின் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்திச் செய்யவும். மேலும் விவரங்கள் அறிய இந்த Telegram group ல் சேரவும்.
https://forms.gle/ob8JhquSN5BHRGBT6
Telegram group
https://t.me/dgspk