ஆஶௌசத்தினால் ஒரு வருடத்திற்குப் பண்டிகை இல்லையென்றால், எந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டும், எதைக் கொண்டாடக்கூடாது? பெருமாளுக்கானப் பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும் , நமக்காக கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் எங்கள் வாத்தியார் கூறினார். உதாரணமாக, திருவாடிப்பூரம் அன்று அது தாயார் திருநக்ஷத்ரம் என்பதால் பெருமாள் தாயாருக்கு ப்ரசாதம் அம்சை பண்ணலாமா? அல்லது எதையும் கொண்டாடக்கூடாது என்பதால் எதையும் செய்யக்கூடாதா? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

பண்டிகை ஒரு வருடத்திற்கில்லை என்றால், பொதுவாக எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.
பண்டிகை இருக்கும் காலமோ அல்லது இல்லாத காலமோ நித்யமும் அவசியம் பெருமாளுக்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணவேண்டும். ஆனால் அந்த ஒரு வருடம் இனிப்பு பதார்த்தங்கள் செய்து எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவது வழக்கமில்லை.ஆழ்வார்கள்,ஆசார்யன் திருக்ஷத்ரங்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்குண்டு.
குறிப்புகள்
ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ர தினத்தன்று எம்பெருமானுக்கு ஒரு திருக்கண்ணமுது அல்லது ஏதாவது இனிப்பு பதார்த்தங்கள் பண்ணி அம்சை பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top