ஸ்ரீ பாத தீர்த்தத்தின் முக்கியத்வம் யாது?எப்படி ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும்? யார் ஸ்வீகரிக்கக்கூடாது? எப்போதெல்லாம் ஸ்வீகரிக்கலாம் விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ஸ்ரீ பாத தீர்த்தம் ஸர்வ பாபா நாசினி ஆகும். ஸ்ரீ பாத தீர்த்தத்தை, ஆசார்யன் திருநக்ஷத்ரத்தன்று அவசியம் ஸ்வீகரிக்க வேண்டும். துவாதசிதோறும் க்ருஹத்திலே அவசியம் பாதுகா ஆராதனம் பண்ணி அந்த தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும்.
அதே போல் பிழைகள் ஏற்பட்டுவிட்டது எனத் தோன்றினாலோ அல்லது எங்காவது சென்று ஆசாரம் குறைவாகி விட்டது எனத் தோன்றினாலோ அப்பொழுதும் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து ஸ்வீகரிப்பது வழக்கத்தில் உண்டு.
பொதுவாக ஆசார்யனுடைய சிஷ்யர்கள் எல்லோரும் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொள்ளலாம். அவர்கள் மட்டுமலாது அந்த ஆசார்யனிடத்தில் அபிமானம் உள்ளவர்களும் அவரின் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்கலாம்.
குறிப்புகள்:
ஸ்ரீ பாத தீர்த்ததை ஸ்வீகரித்து கொள்ளும் பொழுது ஒரு மந்த்ர ஸ்லோகம் சொல்லுவதுண்டு. அது என்ன என்பதை அவரவர்கள் ஆசார்யனிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம் : ஏதத் ஸமஸ்த பாபானாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி4: ।
நிர்ணீதம் ப4க3வத் ப4க்த பாதோ3த3க நிஷேவனம் ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top