தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது அவர் பெரியவர்களுக்குச் செய்யும் மாசியம், ஶ்ராத்த நாட்களில் அன்றைய தளிகையில், சாமான்கள் வாங்கி கொடுப்பதிலும், சுற்று காரியங்கள் செய்து கொடுப்பதிலும் ஒத்தாசையாக இருப்பதே ஸ்த்ரீகள் செய்யக்கூடிய கார்யம்.