மொத்த துவாதசி திதியின் முதல் கால் பாகத்துக்கு ஹரி வாஸரம் என்று பெயர். இது ஏகாதசிக்கு சமம். சாதம் சாப்பிடுவது மஹா பாபம். பெரும்பாலும் ஏகாதசி வ்ரத தினத்தன்று த்வாதசி திதி ஆரம்பித்துவிடும். ஆகையால் கால் பாகம் அன்றே கழிந்து விடும். சில சமயம் மறுநாளும் இருக்கும். அப்போது ஹரிவாஸரம் முடிந்தபின் பாரனை செய்தல் வேண்டும். ஹரி பெருமாளுக்கு உகந்த சமயம் என்பதால் ஹரி வாஸரம் என்று பெயர்.