பெரிய நம்பி அவர்கள் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம க்ரியைகள் எதன் அடிப்படையில் ஒற்றுக்கொள்ளப்பட்டது? இது எப்படி அவரின் வர்ணாஶ்ரம தர்மத்திற்கு விரோதமாகாது? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு செய்த கைங்கர்யம் பற்றி நம் குருபரம்பரையில் கிடைக்கவில்லை, ஸ்வாமி தேஶிகனும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி அவர் மாறனேரி நம்பிக்கு கைங்கர்யம் செய்திருந்தால் கூட வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு தான் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் ஒவ்வொரு நிமிடமும் வர்ணாஶ்ரம தர்மத்திலிருந்து தவறாதவர், பூர்ணமான அநுஷ்டானபரர், யாகம் முதலியவைகள் எல்லாம் செய்தவர் என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் சாதித்திருக்கிறார்.
குறிப்பாக மாறனேரி நம்பி, அவரின் உறவினர்கள் யாரும் ஸ்ரீ வைஷ்ணவர்காளாக இல்லாத போதும் அவர் பரம ஸ்ரீ வைஷ்ணவராக இருந்தவர்.ஆகையால் தன் சரீரத்தை தன் உறவினர்களிடத்தே கொடுக்கக்கூடாது எனும் ஆசை இருந்தது அதை ப்ராத்தித்தும் இருந்தாராம். ஆகவே அந்த ரிதீயிலும் , ஶாஸ்த்ரத்திற்குட்பட்டும் சில வித சம்ஸ்காரங்கள் செய்யலாம் என்று இருக்கிறது.
ஆகவே ஶாஸ்த்ரத்திற்குட்பட்டு, வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணியிருக்கலாம். மேலும் மாறனேரி நம்பியின் வர்ணாஶ்ரம முறையிலே பண்ணலாம், என ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. அதாவது கர்த்தாக்கள் யாருமில்லை என்றால் அந்திம சம்ஸ்காரங்கள் பண்ணலாம் என்றும் அப்படிச் செய்தல் விசேஷம் என்றும் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது. அந்த நெறிக்குட்பட்டு பெரிய நம்பிகள் செய்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top