தற்சமயம் வித்வான்கள் மூலம் சந்த்யாவந்தனம், ஸம்ஹிதா தானம் எனப் பல இணைய வழி வகுப்புகளின் வாயிலாக கற்றுக்கொள்கிறேன்.ஒருவன் இக்கர்ம்மாக்களைச் செய்வதனால் ப்ராமணன் ஆகிறான், மேலும் இதில் தன்னை மேம்படுத்தவும் அதாவது தேஜஸ், அரோக்கியம் வேண்டி ப்ரார்த்திக்கவும் ஸ்லோகம் வருகிறது. அடியேனின் கேள்வி யாதெனில், ப்ராமணர்கள் என்பவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு எந்த வித்தில் தேவை. சமூகம் அவர்கள் மூலம் பெறும் பயன் யாது? ஸ்வாமி. அடியேன் இதை ப்ராமணனான ஒருவர் அறிந்தால் அருவம் சரி இச்சமூகமும் சரி இத்தனை நல்லது உள்ளதா என்று அறிய முடியும் மேலும் ப்ராமணர்களும் தங்கள் கர்மாக்களை விடாதுச் ஶ்ரத்தையாக செய்வார்கள். மேலும், ஒரு புரிதல் இருந்தால் இவர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என பல விதண்டாவாதக் கேள்விகள் தவிர்க்கப்படலாமோ என்று ஒரு எண்ணம்.