நீர் என்பது ஓர் அசித்தாக இருக்கும் பக்ஷத்தில், ஒருவர் தலைக்கு தீர்தாமாடுவதினால் எப்படி சுத்தி அடைவார்கள்? அதனால் தீட்டு எப்படி நீங்கும் என்பதை தெளியப்படுத்த விண்ணப்பிக்கின்றேன். அதே போல் மஞ்சள் குங்குமம் ஏன் மங்களகரமானதாக கருதப்படுகிறது? ஏதனால் அதை மங்களப் பொருட்கள் என்று கூறுகின்றோம்? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ஜலம் என்பது ஶாஸ்த்ர ரீதியிலும் உலக ரிதீயிலும் சுத்தப்படுத்தும் வஸ்து. சரீரத்தை நீர் கொண்டு சுத்தமாக்குவதால் உலக ரிதீயிலும் சரீரத்தில் உள்ள அழுக்கு போகும், ஶாஸ்த்ர ரிதீயிலும் சுத்தமாகும். மேலும் சரீரத்தை சுத்திப்பண்ணால் ஆத்மாவும் சுத்தமாகும் என்று ஶாஸ்த்ரங்கள் சொல்கின்றது.
அதே போல் மஞ்சள், குங்குமம் இவை எல்லாம் மங்களகரமான வஸ்துக்கள் என்று சம்ப்ரதாயத்தில் வழி வழியாக சொல்லப்படுகின்றது. சம்ப்ரதாயம் நமக்கு காண்பித்து கொடுத்தது என்பதனாலேயே ஆசையுடனும், ஶ்ரத்தையுடனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் என்பது மனித சரீரத்திற்குத் தேவையான மிக உயர்ந்த வஸ்து. உயர்ந்த வஸ்துக்களில் பகவானின் அம்சம் இருக்கும் என்று சொல்கின்ற படியால் இதிலும் பகவானின் அம்சம் இருக்கும். மேலும் மஞ்சள், தாமரைப்பூ -, ஸ்வர்ணம் போன்ற வற்றில் தாயாரின் அம்சம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top