ப்ரதோஷ காலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆகமம் சொல்லுவது படி பகவானுக்கு ஆராதனம் நாம் செய்வது தான் கைங்கர்யம். அந்த முறையில் ப்ரதோஷகாலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்காமல் இருப்பது தான் நாம் செய்யும் கைங்கர்யம். ஆனால் ப்ரதோஷகாலம் ஸ்ரீந்ருஸிம்ஹ பெருமாளுக்குரிய காலம் என்பதினால் அவரைச் சென்று சேவிக்கலாம் என ஆகமங்கள் கூறுகிறது.
ஏன்னென்றால், மஹாப்ரதோஷம் என்பது தோஷ காலம், ரௌத்ரகாலம் அது, அதாவது ருத்ர தாண்டவமாடும் காலம். ஆகையால் ஆத்திலிருந்துக் கொண்டு நாம் மௌன வ்ரதம் இருக்க வேண்டும் அது தான் நாம் செய்யும் கைங்கர்யம். பெரியவர்கள் எல்லாரும் சங்கல்பித்துக் கொண்டு மௌன வ்ரதமிருப்பார்கள்.
ப்ரதோஷ காலம் என்பது அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் ஒன்றரை மணி நேரம்.