நித்யமும் நமக்கு யார் ஸமாஶ்ரயணம் செய்வித்தார்களோ அந்த ஆசார்யனின் தனியன் மட்டும் சேவித்தால் போதுமானதா? அல்லது அவரின் ஆசார்யன் தனியனும் சேர்த்து சேவிக்க வேண்டுமா?

நித்யமும் நமக்கு ஸமாஶ்ரயணம் செய்துவித்த ஆசார்யன் தனியனை சேவித்து அவருடைய ஆசார்யன் தனியனையும் சேர்த்துச் சேவிக்க வேண்டும். ஆசார்யன் உபதேசித்திருப்பார்.
பூர்த்தியாக குரு பரம்பரையை வணங்க வேண்டும். குரு பரம்பரையை வணங்கக்கூடிய க்ரமங்களை அவரவர்களுடைய ஆசார்யர்கள் உபதேசித்திருப்பார்கள். அந்த க்ரமத்தில் பூர்த்தியாக அனைத்து தனியன்களையும் சேவிப்பது மிகவும் உசிதம். ஒவ்வொரு ஆசார்யனையும் தனிப்பட்ட முறையில் அவரின் திருநாமமோ, தனியனோ சொல்லி வணங்க வேண்டுமென்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top