பர ஸமர்ப்பணம் செய்து கொள்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உண்டு.
“அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்” என்பது ஸ்வாமியின் திருவாக்கு. பஞ்ச ஸம்ஸ்காரம் எல்லாரும் பண்ணிக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகலாம்.
ஆனால், பஞ்ச ஸம்ஸ்காரம், பரந்யாஸமெல்லாம் செய்து கொண்ட பின்பு, கர்மாநுஷ்டானங்களை நித்யமும் விடாமல் பண்ண வேண்டும். அந்த கர்மாநுஷ்டானங்களைச் செய்வதற்கு கர்ம பூமியான பாரதமே சிறந்த இடம்.

