ஏகாதசி என்பது ஒரு நித்ய வ்ரதம், அதனாலேயே அது முக்கியத்வம் பெறுகிறது. ஆபால விருத்தர்கள் எல்லாக் காலங்களிலும் அனுஷ்டிக்க வேண்டியது. அஶௌச காலங்களில் கூட ஏகாதசி விரதத்தை விடும் வழக்கம் இல்லை. ஸ்த்ரீகள், ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும்.
புருஷர்கள் நிர்ஜலமாக இருப்பது விசேஷம். அதற்குச் சக்தி இல்லை என்றால் தீர்த்தத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள் வெறும் பால் பழங்கள் மட்டுமோ, அல்லது ஒரு வேளை பலகாரம் செய்தோ அனுஷ்டிக்கலாம். இவை எதையும் மேற்கொள்ள முடியாதவர்கள் அன்று அவசியம் அரிசி சாதம் சாப்பிடாமல் அனுஷ்டிக்கலாம்.
சுமங்கலிகள் நிர்ஜலமான உபவாஸம் இருக்கும் வழக்கம் இல்லை. அவர்களுக்கு பர்தர் கைங்கர்யம் முக்கியம். மறுநாள் பர்தாவினுடைய துவாதசி பாரணைக்கான காரியங்களை இவர்கள் செய்ய வேண்டும். அதனால் அதற்கு ஒத்துழைத்தாலே போதுமானது.