ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதற்கான குறிப்பிட்ட நாளோ நேரமோ, தேதியோ கணக்கு கிடையாது. நேரம் ஆனவுடன் அர்ச்சிராதி கதியில் போய் ஸ்ரீ வைகுண்டத்தைச் சீக்கிரமே அடைந்து விடுகிறான். அதற்கு விளம்பம் கிடையாது என்று மாத்திரம் சொல்லியிருக்கிறது.
ஆழவார் ஆசாரியர்கள் ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீவைகுண்டம் போவது பற்றி ஸ்ரீபாஷ்யத்தில் இருக்கிறது. மற்றும் ”சூழ்விசும்பணி முகில், முனியே நான்முகனே” முதலான பாசுரங்களிலும் பார்க்கலாம்.