அடியேனுக்கு ஆசார்யன் அனுக்ரஹத்தினால் ப்ரபத்தி ஆகிவிட்டது. ஶரணாகதி செய்தவர்கள் பாகவத அபசாரம் படக்கூடாது என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். அடியேனுக்கு இதில் ஒரு சந்தேகம். பாகவத அபசாரம் என்று எவற்றைக் குறிப்பாக ஶாஸ்த்ரம் கூறுகிறது? பிறகு யார் பாகவதர்கள் என்று நம் ஸம்ப்ரதாயம் கூறுகிறது? ப்ரபத்தி ஆகி உண்மையான ஶ்ரீவைஷ்ணவர்களாய் இருப்பவர்கள் மட்டும் தானா? அல்லது எம்பெருமானிடம் போல் பிற தேவதாந்திரங்களிடமும் பக்தி கொண்டவருமா? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.

பகவானை சேவிப்பவர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் பாகவதர்கள். பரந்யாஸம் ஆனவர்கள் பாகவதர்கள். நெற்றியில் திருமண்காப்பு இட்டுக்கொள்பவர்கள் பாகவதர்கள். அப்படிப் பார்க்கும்பொழுது பகவானைச் சேர்ந்த பகவத்பக்தர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். அதனால் பொதுவாக யாரிடமும் அபசாரம் பண்ணாமல் இருக்கவேண்டும்.
பாகவதர் என்றால் என்ன லக்ஷணம், அவர் சரியாக இருக்கிறார, அவர் ஸ்ரேஷ்டமான பாகவதரா என்றெல்லாம் நாம் பார்க்கத் தேவையில்லை. பாகவத அபசாரம் நாம் படக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர இவையெல்லாம் முக்கியமில்லை. அதனால் எப்படிப்பட்ட பாகவதராக இருந்தாலும் சரி அவரிடம் அபசாரப்படாமல் இருக்க வேண்டும் . அதுவே ஸ்ரேஷ்டம் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top