பகவானை சேவிப்பவர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் பாகவதர்கள். பரந்யாஸம் ஆனவர்கள் பாகவதர்கள். நெற்றியில் திருமண்காப்பு இட்டுக்கொள்பவர்கள் பாகவதர்கள். அப்படிப் பார்க்கும்பொழுது பகவானைச் சேர்ந்த பகவத்பக்தர்கள் எல்லோருமே பாகவதர்கள்தான். அதனால் பொதுவாக யாரிடமும் அபசாரம் பண்ணாமல் இருக்கவேண்டும்.
பாகவதர் என்றால் என்ன லக்ஷணம், அவர் சரியாக இருக்கிறார, அவர் ஸ்ரேஷ்டமான பாகவதரா என்றெல்லாம் நாம் பார்க்கத் தேவையில்லை. பாகவத அபசாரம் நாம் படக்கூடாது என்பதுதான் முக்கியமே தவிர இவையெல்லாம் முக்கியமில்லை. அதனால் எப்படிப்பட்ட பாகவதராக இருந்தாலும் சரி அவரிடம் அபசாரப்படாமல் இருக்க வேண்டும் . அதுவே ஸ்ரேஷ்டம் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.