தலைமுடி க்ஷௌரம் செய்த பின்னர் ஒவ்வொரு முறையும் பூணூல் மாற்றுவது அவசியமா? அடியேன் தினமும் பெருமாள் திருவாராதனம் செய்கின்றேன், அதனால் இச்சந்தேகம்.

க்ஷௌரம் செய்துகொள்ளும்பொழுது பண்ணுகிறவருடைய கையோ, ஆயுதமோ, அவர் தெளிக்கக்கூடிய ஜலமோ அல்லது அவர் போர்த்தக்கூடிய வஸ்திரமோ பட்டு பூணூல் அசுத்தம் ஆகிவிடுகிறது. பூணூல் என்பது எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.
சுத்தமுடைய யக்ஞோபவீதத்துடன்தான் நாம் அனுஷ்டானங்களைப் பண்ணவேண்டும். அசுத்தியானால் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக்கணக்கில் தான் க்ஷௌரம் செய்துகொண்டால் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top