மஹாளய பக்ஷத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள், 15 நாட்களும் இரவில் பலகாரம் செய்யவேண்டும்.
அப்படியில்லை ஒரு நாள் தான் தர்ப்பணம் செய்வதென்றால் அதற்கு சக்ருண் மஹாளயம் என்று பெயர், நம்மில் பலர் அதைத்தான் செய்கின்றனர். அப்படி ஒருநாள் தர்ப்பணம் செய்பவர்கள் 15 நாட்களும் பலகாரங்கள் பண்ணவேண்டிய அவசியமில்லை என்பதாக மேல்பாக்கம் ஸ்வாமி சாதித்திருக்கிறார். அதற்கு ஒரு நாள் முன்னர் கூட பலகாரம் என்று அவசியமில்லை எனவும் சாதித்துள்ளார்.
சில பெரியவர்கள் 15 நாட்கள் தர்ப்பணம் பண்ணவில்லையென்றாலும் 15 நாட்களும் பலகாரம் என்று வைத்துள்ளனர். அவரவர் ஆத்து வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
மஹான்களின் அபிப்ராயப்படி 15 தர்ப்பணம் பண்ணாவிட்டால் 15 பலகாரம் தேவையில்லை என்றுத் தெரிகிறது.
தர்ப்பண தினத்தன்று எப்படியும் பலகாரம், அதற்கு முதல் நாள் தேவையில்லை என்று இருக்கிறது.