மந்த்ரஸாலகட்டம் ஸ்வாமி என்று ஒருவர் இருந்தார்.அந்த ஸ்வாமி தர்ம ஶாஸ்த்ரங்களிலே சில தனிப்பட்ட விசேஷமான அபிப்ராயங்கள் வைத்து நிர்ணயம் பண்ணி இருக்கின்றார். அதற்கே மந்த்ரஸாலகட்ட ஸம்ப்ரதாயம் என்று பெயர். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் சில பேர் இப்பவும் இருக்கின்றனர். அவர்கள் அதற்கேற்ற மாதிரியான ஸம்ஸ்காரங்கள், ஶ்ராத்தங்கள் இவையெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பண்ணுவதாக இருந்தால் அதைப் பற்றி விஸ்தாரமாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்படி ஒரு ஸம்ப்ரதாயம் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் போதும்.

