வ்ரதங்கள் எல்லாம் பெருமாளுக்கு கிடையாது. மனுஷ்யாளுக்கு மட்டும் தான். அதனால் பண்டிகை நாட்களில் ஏகாதசியும் சேர்ந்து வந்தால் பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு சமர்ப்பித்து அம்சை பண்ணுவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. பண்டிகைத் தளிகையை ஏகாதசி அன்று சாப்பிடலாமா வேண்டாமா என்பது அவரவர்களைப் பொருத்தது. வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று நினைப்பது முக்கியமாக தோன்றினால் வ்ரதம் அனுஷ்டிக்கலாம் அல்லது பண்டிகைக்குப் பெருமாளுக்கு அம்சை பண்ணதை சாப்பிடுது முக்கியம் என்று தோன்றினால் அதை சாப்பிடலாம். ஆனால் கண்டிப்பாக அன்று அரிசி சாதம் சாப்பிடக்கூடாது வேண்டுமென்றால் சொஜ்ஜி செய்துப் பண்டிகை தளிகையுடன் சாப்பிடலாம்.
பண்டிகைத் தளிகை சாப்பிடுவதைவிட ஏகாதசி வ்ரதம் இருப்பதே மிகவும் ஶ்ரேஷ்டம். அன்று வ்ரதத்தை அனுஷ்டிப்பது ஒரு தவறும் கிடையாது.