ஒரு மாஸிகம் நின்று போய் அடுத்த மாஸிகம் சேர்ந்து பண்ணும்போது, பித்ரு ஸ்தானத்தில் இரண்டு பேர் வேண்டும். சங்கல்பத்தில் இரண்டு மாஸிகத்தையும் சொல்லிவிட்டு “தந்த்ரேந கரிஷ்யே” என்று சங்கல்பத்தில் சொல்லவேண்டும். விஷ்ணு வர்ணத்தில் விஶ்வே தேவர் வர்ணத்தில் இரண்டையும் சொல்லி, உ.தா 4,5 என்றால் துரீய பஞ்சமான மாஸிகே தந்த்ரேன கரிஷ்யே! துரீய பஞ்சமான மாஸிகே ஶ்ரார்த்தே விஶ்வே தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: விஷ்ணு தேவார்த்தம் பவதாக்ஷணா கர்தவ்ய: பித்ரு ஸ்தானத்தில் மட்டும் இரண்டு பேர் தனித்தனியாக தூரீய மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று ஒருத்தரும் பஞ்சமா மாஸிகார்த்தே பவதாக்ஷணா கர்தவ்ய: என்று மற்றொருத்தர் உட்கார வைக்கவேண்டும்.
அதே போல் தத்தம் கொடுக்கும்போதும் பித்ரு ஸ்தானத்தில் மாத்ரம் பிரித்துச் சொல்லவேண்டும் பாக்கியெல்லாம் சேர்ந்து வரும்.