22. a. அடியேன், எனது தகப்பனார் குடும்பத்தை விட்டு பிரிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இறந்து விட்டார் என்று 2018ல் தெரிய வந்தது. என் தாயார், அவருக்கு எந்த வித காரியமும் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது குடும்பத்தில் ஏற்படும் சில விஷயங்கள் பித்ரு தோஷத்தாலோ என்று நினைக்க வைக்கிறது. நான் 6 வருடத்திற்கு முன்பு அவருடன் தொலைபேசி மூலம் பேசியும் இருக்கிறேன். பரமபதித்த திதி தெரியாமல் எப்படி காரியம் செய்வது என்பதற்கு வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.
b. மேலும் இச்சமயத்தில் கோவிலுக்கு போவதோ ஸமாஶ்ரயனம் செய்து கொள்வதோ சரியாகுமா என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.
குறிப்பு: நான் எனது மாமாவிற்காக இந்த வருடம் ஐப்பசி மாதம் நிமித்திக ஸ்தானத்தில் அமர்ந்தேன்.