இதை ஸம்ப்ரதாய பரமாக புரிந்துகொள்ள வேண்டும். க்ருஹ்தாஶ்ரமத்தில் தம்பதிகளுக்கு தான் முக்கியத்வம், அவர்களுக்குதான் வைசிஶ்டியம். தம்பதியாக இருந்துதான் அனைத்து கைங்கர்யங்களும் பண்ணவேண்டும என ஶாஸ்த்ரமும் ஸம்ப்ரதாயமும் விதித்திருக்கிறது.அப்படி ஒருத்தராக இருந்தால், ஸ்த்ரீயோ புருஷரோ அவர்களுக்கு முக்கியத்வம் தரப்படவில்லை.
புருஷர்களுக்கும் மனைவியில்லாவிடில் பல வைதீக கர்மாக்கள் பண்ண தகுதியில்லாதவர்களாகிறார்கள். அதே போல் தான் ஸ்த்ரீகளும் மங்கலகார்யங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
ஸம்ப்ரதாயபரமாக தம்பதிகளாக இருக்கிற வழிபாடு தான் மிகவும் சிறந்தது என வழக்கமாக வந்திருக்கிறது.
இதற்கு மேல் ப்ரபத்தி விஷயம் பொறுத்தவரை எம்பெருமான் தான் பரம்புருஷன் நாம் எல்லோரும் ஸ்த்ரீ ப்ராயர்கள் எல்லாம் சரியே. அப்படி ஸ்த்ரீ ப்ராயர்களாக இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில் எவ்வித தடையுமில்லை. ப்ரபத்தியானவர்கள் ஒரு க்ருதக்ருத்யானாக இருந்து, காலக்ஷேபங்கள் பண்ணுவதோ, ப்ரபந்த/ஸ்தோத்ராதிகள் சேவிப்பதோ, கோவிலுக்குச் செல்வதோ, அங்கு கைங்கர்யங்கள் செய்வதில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
ஸம்ப்ரதாயிகமாக சில கார்யங்கள் இருக்கு, ஶாஸ்த்ர விஹிதமாக சில கார்யங்கள் இருக்கு அதற்கு இன்னார் தான் என்ற விதிமுறையை உலகத்தில் பொதுவாகவே பின்பற்றுவதைப் பார்க்கலாம்.
உ.தா: மனைவியை இழந்த புருஷர்கள் யாகம் பண்ணமுடியாதென்று இருப்பது போல், ப்ரம்மச்சாரியாக இருப்பவர்களால் ஔபாஸனாதிகள் பண்ணமுடியாது அவனுக்கு திருமணமாகி இருத்தல் வேண்டும். ஏன் ப்ரம்மச்சாரி பண்ணக்கூடாது என்ற கேள்வி இங்கே வராது அதே போல் தான் சில வர்ணாஶ்ரமங்களுக்கு சில கைங்கர்யங்கள் ஶாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. அதை ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் அவர்கள் அனுஷ்டானத்திலும் வைத்திருக்கிறார்கள். அதை அதன்படியே பின்பற்றுவது தான் நலம் மேலும், ஒரு விஷயம் மட்டும் எடுத்துக்கொண்டு இதற்கு மட்டும் இப்படியென்று யோசிக்கவேண்டிய அவசியமில்லை. எப்படித் தனித்திருக்கும் ஸ்த்ரீகளுக்கு சில கார்யங்கள் நிஷிதமாக இருக்கோ அதே போல் தனித்திருக்கும் புருஷர்களுக்கும் இருக்கு.
ஆசார்ய அனுக்ரஹத்தின் படி என்ன தெரிகிறது என்றால் தம்பதிகளாக இருக்கும் வழிபாடு தான் சரியானதாக இருக்கும்.