யஜுர் வேதத்தில் போதாயன சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம் என இரண்டு இருக்கின்றது, அவ்விரண்டையும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
அந்தந்த சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள் அந்தந்த சூத்திரத்தில் சொன்னபடி அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒருவர் எந்தச் சூத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது, அவரின் பரம்பரையிலே வந்திருக்கும், கோத்திரம் போலே அபிவாத்யையில் இதையும் அதாவது “ஆபஸ்தம்ப சூத்ர:” “போதாயன சூத்ர”: என்று சொல்லுவார்கள்.
போதாயனர் சொன்ன அமாவாஸை சிறிது வித்தியாசமானது. சாயந்நத்தில் அமாவாஸை இருந்தால் கூட, அன்று அமாவாஸை என அதில் வரும். அதற்குப் பல கணக்களுண்டு பின் நாளில் விஸ்தாரமாக பார்க்கலாம்.
அக்கணக்கின் படி போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் சம்ப்ரதாயத்தின் படி போதாயன அமாவாஸை அன்று அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல், ஆபஸ்தம்ப சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள், அவர்கள் கணக்கின்படி அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
குறிப்புகள்:
அமாவாஸை தர்ப்பணமும் ஶ்ராத்தமே. அபராஹ்ன காலத்தில், என்று அமாவாஸை அதிகமாக இருக்கின்றதோ அன்று ஆபஸ்தம்பர்கள் அபராஹ்னத்தில் அமாவாஸை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சந்திர தரிசனத்திற்கு முதல் நாளைக்கு முதல் நாள், போதாயன அமாவாஸை ஆகும்.