கோதானம் என்பது, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஒரு விசேஷமான அனுஷ்டானமாகும்.
கோதானம் செய்வதில் இரு வகையுண்டு. அதில் ஒன்று சாஸ்த்ரப்படி சங்கல்பம் செய்து பண்ணுவது என்பது.
சாஸ்த்ரப்படி சங்கல்பம் செய்து கோதானம் பண்ணுவதாக இருந்தால், கைம்பெண்கள் அதை செய்ய இயலாது.
லௌகீகமான கோதானம் என்பதும் உண்டு, அதற்கும் விசேஷமான பலன்கள் உண்டு எந்தக் குறைவும் அதற்குக் கிடையாது. மேலும் சாஸ்த்ரப்படி விசேஷ சங்கல்பம் ஏதும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும், கைம்பெண்களும் பண்ணலாம்.
வேண்டுமென்றால், வேறு யார் மூலமாகவும் லௌகீக கோதானத்தைச் செய்யலாம்.