அடியேன் வடகலை சம்ப்ரதாயத்தைச் சேர்த்தவன். அடியேன் சிறு வயதில் இருந்தே நெற்றியில் ஸ்ரீசூர்ணம் சிவப்பு வண்ணத்தில் இட்டுக்கொள்கிறேன். அடியேனின் தகப்பனாரை பார்த்து அந்தப் பழக்கம். அடியேனின் தகப்பனார் மஞ்சள் இட்டுக்கொள்கிறார் சிலகாலமாக. அடியேனின் தகப்பனார் சொன்ன காரணம், வைதீகாள் மஞ்சள் நிறத்தில் இட்டுக்கொள்வார்கள் என்று. பெரியவர்கள் சிவப்பும் மஞ்சளும் இட்டுக்கொள்ளும் வித்யாசத்தை அடியேனுக்கு போதிக்க ப்ரார்த்திக்கிறேன். அடியேன் வேதாந்த தேசிகனின் படத்தில் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். பன்னிரு திருமண் இட்டுக்கொண்டாலும் சிவப்பு உகந்ததா?

சிவப்பு கலக்காத மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் இடுவது பெரியவர்கள் வழக்கம். மேலும் அதுதான் உசிதமானது.
குறிப்புகள்:
சிவப்பு ஸ்ரீ சூர்ணத்திலும், மஞ்சள் கலந்திருக்கும். அதனால் சிவப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்வதில் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top