அடியேன் ஆஹாரநியமத்தை அனுஷ்டிக்க முயன்று வருகிறேன். வெளியிடங்களில் உணவு உட்கொள்வதை தவிர்த்துவிட்டேன் (Work from home காரணமாக இது முடிந்தது). அடியேனுக்கு 36 அகவை ஆகிறது. ஆசார்யன் அனுக்ரஹத்தில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புத்தி வருவதுபோல் இருக்கிறது . அடியேனின் சிற்றறிவுக்கு ஆஹாரநியமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முயற்சித்து வருகிறேன். அடியேனுக்குப் பெரியவர்கள் எந்தெந்த காய்கறிகளை உண்ணலாம் என்று பரிந்துரைத்தால் மிகுந்த உதவியாய் இருக்கும். அடியேனுக்குத்தெரிந்த காய்கறிகளின் பட்டியல்: -> கீரை வகைகள் (முருங்கை மற்றும் சிறு கீரை தவிர) -> வெண்டைக்காய் -> கொத்தவரங்காய் -> செளசெள -> சேனைக்கிழங்கு -> சேப்பங்கிழங்கு -> கருணைக்கிழங்கு -> வாழைக்காய் -> பூசணிக்காய் -> பரங்கிக்காய் -> வெள்ளரிக்காய் -> தக்காளி ஆஹாரநியமத்தைப் பற்றி ஏதேனும் உபன்யாசம் இருந்தால் அடியேனுக்குப் பரிந்துரைக்கும் படி பணிகிறேன். வாசக தோஷம் இருந்தால் மன்னிக்கவும். அடியேனின் அறியாமையைப் பொறுத்தருள ப்ரார்த்திக்கிறேன்.

இங்கே குறிப்பிட்ட எல்லாக் காய்களும், சாஸ்த்ரப்படி விருத்தம் என்று சொல்ல முடியாது.
சௌ சௌ, தக்காளி என இவை இரண்டை மட்டும் பெரியோர்கள் ஏற்பதில்லை. அவ்விரண்டை ஏற்பதனால் பெரிய தோஷமில்லை, உசிதப்படி செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top