நான் ஸ்மார்த்த குடும்பத்தில் வாக்கப்படும் படியாயிற்று. இருப்பினும், பெருமாளின் அனுக்ரஹத்தால் நானும், என் பெண்களும் ப்ரந்யாஸம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அடியேன் ஶ்ராத்த சமயம் மற்றும் அமாவாஸை நேரம் எந்த சம்ப்ரதாயத்தை பின்பற்ற வேண்டும் (எவ்வழியின் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும்? அதாவது மடிசார்கட்டு தொடங்கி மற்றவை). [குறிப்பு : இதே போல் முன்பும் கேள்வி வந்தது]

இது சற்று லௌகீகமான கேள்வியாக இருக்கிறது. இருப்பினும், பெருமாளிடம் பக்தி இருக்கின்றபடியாலும், இந்த ஸத்சம்ப்ரதாயத்தின் பெருமை தெரிந்தபடியாலும், இச்சம்ப்ரதாயத்தின் படி மடிசார் கட்டிக்கொள்வது நல்லது.
ஆனால், ஒருகால் அங்கு ஆத்தில் இருப்பவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், அவர்கள் சொல்படி நடப்பதால் ஒரு தோஷமும் ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top