ஆத்துப்புருஷர்கள், பெருமாள் திருவாராதனை செய்ய ஈடுபாடில்லாத பக்ஷத்தில், ஸ்த்ரீகள் பெருமாள் படங்கள், விக்ரஹங்கள் , சாளக்கிராமத்திற்கு என்ன மாதிரியான பூஜைகள் செய்யலாம்? மேலும் ஸ்த்ரீகள் பெருமாளுக்கு அபிஷேகம், மங்களார்த்தி, அர்ச்சனை போன்றவை செய்யலாமா? ஸ்ரீவைஷ்ணவம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இப்பொழுது தான் அடியேனுக்கு ஆவல் ஏற்பட்டிருக்கின்றது.

ஆத்துப்புருஷர்கள், பெருமாள் திருவாராதனை செய்ய ஈடுபாடில்லாத பக்ஷத்தில், ஸ்த்ரீகள் பெருமாள் படங்கள், விக்ரஹங்களுக்கெல்லாம் புஷ்பம் சாற்றி வழிபடலாம்.
சாளக்கிராம பெருமாள் இருந்தால், கூடாரவல்லி பாசுரத்தைச் சொல்லி மானசீகமாக அம்சை பண்ணலாம். அப்படி அம்சை பண்ணி, பெருமாளே! உனக்குத் திருவாராதனை நடக்கும்படியாக நீரே சங்கல்பித்துக்கொண்டு, ஆத்துப்புருஷர்கள் திருவாராதனை செய்யும்படி அனுக்ரஹிக்கணும் என்கின்ற ப்ரார்த்தனையுடன் தினமும் பெருமாளை ஶ்ரத்தையுடன் வழிபட, நல்லது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top