ப்ரபத்தி செய்துகொண்டால், பரமபதம் அடைந்த பின் மோக்ஷம் உறுதி என்று நம் பெரியோர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் குழந்தைகளும் பாகவதாக்களே என்றும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ப்ரபத்திக்குப் பின்பு சிலர் நாம் மோக்ஷம் கண்டிப்பாக பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நமது சாஸ்திரத்தை முழுவதுமாக அறிந்தும், கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ இளைய தலைமுறையினரையோ , மற்றவர்களையோ , நாட்டுப்பெண்களையோ காயப்படுத்துகிறார்கள் , அவமதிக்கிறார்கள். மேற்கண்ட செயல்களுக்கு ஒருவருக்கு மோக்ஷம் கிடைக்குமா? ப்ரபத்தி செய்து கொண்டபின் ஆசாரியனின் உபதேசத்தைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாக இல்லாமல் , இம்மாதிரியான தவறான அணுகுமுறை காரணமாக ப்ரபத்தி மீது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. தயவுசெய்து வழிகாட்டவும்.

ப்ரபத்திக்குப்பின் மோக்ஷம் உறுதி அதில் எந்த ஐயமும் வேண்டாம்.
சரணாகதி செய்துக்கொண்ட பின், பாகவதர்கள் ஒருவருக்கொருவர் அபச்சாரப்படாமல் நடந்துக்கொள்வது முக்கியம் என்று சாஸ்த்ரம் சொல்கிறது.
அதை மீறி அபச்சாரப்பட்டால் பகவான் சிறு தண்டனையையும் கொடுப்பார். அதிலும் எந்த ஐயமும் வேண்டாம்.
அதே சமயம் பெரியவர்கள் சிறியவர்களை, நல்வழிப்படுத்துவதற்காக சில வார்த்தைகள் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top