அடியேன் ஆத்துக்காரர் மூன்று மாதம் முன்பு ஆசாரியன் திருவடி சேர்ந்தார். அடியேனின் புத்ரர்கள் அமாவாஸை தர்ப்பணம் இப்போதே செய்ய வேண்டுமா அல்லது ஆப்தீகம் முடிந்ததும் செய்யலாமா?. அடியேனுக்கு தேவரீர் மூலம் விளக்கம் வேண்டும். க்ஷமிக்கவும்.

அமாவாஸை தர்ப்பணம் சபிண்டிகரணத்திலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும். ஆப்தீகம் முடியும் வரை காக்கவேண்டிய அவசியமில்லை. இப்போதிலிருந்தே செய்யலாம்.
சபிண்டிகரணம் முடிந்த பிறகு, தர்ப்பணம் செய்யும் நாள் எது முதலில் வருகிறதோ அதாவது, அமாவாஸையோ இல்லை மாசப்பிறப்போ எது வருகிறதோ அதில் ஆரம்பித்து, எல்லா தர்ப்பணங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும். மாசப்பிறப்பு தர்ப்பணம், சிலர் 4 மாதம் செய்வார்கள், சிலர் 12 மாதமும் தர்ப்பணங்கள் செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top