தங்கள் தாத்தா எந்த ஆசார்யரை ஆஶ்ரயித்தார் என்று அறியாத பக்ஷத்தில், தாங்கள், தங்கள் மனதுக்கு உகந்த எந்த ஆசார்யரை வேண்டுமானாலும் ஆஶ்ரயிக்கலாம்.
அதாவது, இவர் நம்மை திருத்திப்பணிகொள்வார் என்று தங்களுக்கு விஶ்வாசம் தோன்றும்படியான ஒரு ஆசார்யனிடத்தில் அந்வயித்து ஸமாஶ்ரயணம், பரந்யாஸாதிகளைச் செய்துக்கொள்ளலாம்.
அஹோபில மடம் தொடங்கி பல ஆசார்யர்கள் உள்ளனர். உங்களுக்கு எந்த ஆசார்யரிடம் பக்தி உள்ளதோ அவரை ஆஶ்ரயிக்கலாம்.
குறிப்புகள்:
ப்ராமணர்கள் போலே, க்ஷத்ரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சந்தியாவந்தனாதிகள் உண்டு, மற்றவர்களுக்குக் கிடையாது. ஆனால், காலையில் ஸ்நானம் செய்து த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக்கொண்டு, ஆசார்யன் தனியன் ஸேவித்து, பெருமாளை ஸேவித்து போன்ற காரியங்களைச் செய்யலாம்