அடியேன் ப்ரமாண அல்லாத சமூகத்தை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவன், எங்கள் குல தெய்வம் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள். எங்கள் தாத்தா ஸ்ரீ பெரும்புதூரில் முத்ராதாரணம் செய்துகொள்வார். மேலும் அவர் எங்கள் க்ராமத்தில் விடாது நகர் சங்கீர்தநம் செய்தும் , ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் படியும் வாழ்ந்தார். ஆனால் அவருக்குப்பின் அது நின்று விட்டது. எங்கள் அப்பா நாங்கள் எல்லோரும் திருவிழா காலங்களில் மட்டும் கோவிலுக்குச் செல்வோம். சம்ப்ரதாயமும் அறியாது போனோம். அடியேனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தாத்தா போல் இருக்க அவா. ஆனால், எங்கள் ஆசார்யன் யார் என்று தெரியாது. எப்படி முத்ராதாரணம் பெறுவது, வேறு ஆசாரியரிடம் சென்று, எப்படி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று நல் வழி காட்டவும். மேலும் ப்ராமணர்கள் போல் அடியேனும் சந்தியா வந்தன அனுஷ்டாநம் செய்யலாமா? அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

தங்கள் தாத்தா எந்த ஆசார்யரை ஆஶ்ரயித்தார் என்று அறியாத பக்ஷத்தில், தாங்கள், தங்கள் மனதுக்கு உகந்த எந்த ஆசார்யரை வேண்டுமானாலும் ஆஶ்ரயிக்கலாம்.
அதாவது, இவர் நம்மை திருத்திப்பணிகொள்வார் என்று தங்களுக்கு விஶ்வாசம் தோன்றும்படியான ஒரு ஆசார்யனிடத்தில் அந்வயித்து ஸமாஶ்ரயணம், பரந்யாஸாதிகளைச் செய்துக்கொள்ளலாம்.
அஹோபில மடம் தொடங்கி பல ஆசார்யர்கள் உள்ளனர். உங்களுக்கு எந்த ஆசார்யரிடம் பக்தி உள்ளதோ அவரை ஆஶ்ரயிக்கலாம்.
குறிப்புகள்:
ப்ராமணர்கள் போலே, க்ஷத்ரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சந்தியாவந்தனாதிகள் உண்டு, மற்றவர்களுக்குக் கிடையாது. ஆனால், காலையில் ஸ்நானம் செய்து த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக்கொண்டு, ஆசார்யன் தனியன் ஸேவித்து, பெருமாளை ஸேவித்து போன்ற காரியங்களைச் செய்யலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top