க்ரந்த சதுஷ்டயத்தில் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தையும், பகவத் விஷயத்தையும் பங்க்தி ஸேவித்தே காலக்ஷேபம் பண்ணலாம். அதில் இருக்கும் ஸ்ரீ ஸூக்திகளை ஸேவித்து, அறிந்துக்கொண்டு, உத்தராவலோபனம் செய்து நல்ல படியாக காலக்ஷேபங்கள் பண்ணனும்.
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம் இவ்விரண்டிலும் நிறைய வேத வாக்யங்கள் இருக்கின்ற படியால் ஸ்த்ரீகள் நேரே வாசிக்கின்ற படி இருக்காது. அக்ரந்தம் பற்றி அறியவேண்டுமானால், காலஷேப கோஷ்டியில் பின்னாடி உட்கார்ந்துக்கொண்டு கேட்கலாம். பிறகு, அதன் மூலத்தை உத்தராவலோபனம்/ திருப்பி படிப்பது என்பது ஸ்ரமமாக இருக்கும்.
அதனால் நம் நாவல்பாக்காம் ஸ்ரீ உ வே வாஸுதேவாச்சார்யார் ஸ்வாமி என பல ஆசார்யர்கள் இன்று எளிய தமிழில் நாம் புரிந்துக்கொள்ளும் படியாக பரம க்ருபையோடு அதன் வ்யாக்யாணம் அருளியுள்ளனர். அதைப்படித்து விஷயத்தை தெரிந்துக்கொள்ளலாம்.