அனுஷ்டானத்தை முறையாக பண்ணிக்கொண்டு, ஆசாரங்களை எல்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவர், அவர்கள் கொடுக்கின்ற ப்ரசாதத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்/ற அவசியம் கிடையாது. ஏனென்றால், இவர்கள் செய்யும் ஆசார அனுஷ்டானங்களே பகவத் ஆராதனம் தான். ஆசார அனுஷ்டானங்களுக்கு பங்கம் ஏற்படும்படியாக ஒரு கார்யத்தைப் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதைப் பண்ணாமல் போனால் அபசாரம் ஏற்படாது.
குறிப்புகள்:
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று அனுஷ்டானம் மற்றொன்று பக்தி. பக்தியுடன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்ததை பாகவதர்கள் ஸ்வீகரிப்பது என்பது மிகவும் உசத்தியான விஷயம்.
உண்மையான பாகவதர்கள், அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லையென்றால் தாங்கள் தயாரித்த ப்ரசாதத்தை, ஆசாரமாக இருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்வீகரிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் . இவர்கள் கடைபிடிக்கும் ஆசார அனுஷ்டானங்களை புரிந்து கொண்டு அவர்களே விலகி நிற்பார்கள்.