பொதுவாக நாம் செய்யக்கூடிய ப்ராயச்சித்தமென்பது, பெருமாளிடமே க்ஷமாபணம் செய்வது தான். விசேஷமாக, பெருமாளிடம் ப்ராயச்சித்த சரணாகதி பண்ணுவதும் உண்டு.
அந்தந்த அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் என்ன என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன பாபம் பண்ணியிருக்கோம் என்று தெரிந்தால் அதற்கு என்ன ப்ராயச்சித்தம் என்று தெரிந்துகொண்டு அதை செய்யலாம். அப்படி பண்ண முடியாவிட்டால் ஸ்வாமி தேசிகன் ந்யாஸ தசகத்தில் அருளிய “
அக்ருʼத்யாநாம் ச கரணம் க்ருʼத்யானாம் வர்ஜனம் ச மே I
க்ஷமஸ்வ நிகி2லம் தே3வ ப்ரணதார்தீஹர ப்ரபோ4 II
என்கின்ற இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால் அதுவே ஒரு ப்ராயச்சித்தம் தான்.