கடந்த மாத சுதர்சனம் வெளியீட்டில் அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் பற்றி ஸ்வாமின் குறிப்பிட்டிருந்தார். நேரம், இடக்கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய் அல்லது பிற காரணங்களால் சில காரியங்களைச் செய்ய இயலாமையால் ஏற்படும் அபசாரங்களுக்கு எப்படி பர்யாச்சித்தம் செய்வது? தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பொதுவாக நாம் செய்யக்கூடிய ப்ராயச்சித்தமென்பது, பெருமாளிடமே க்ஷமாபணம் செய்வது தான். விசேஷமாக, பெருமாளிடம் ப்ராயச்சித்த சரணாகதி பண்ணுவதும் உண்டு.
அந்தந்த அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் என்ன என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன பாபம் பண்ணியிருக்கோம் என்று தெரிந்தால் அதற்கு என்ன ப்ராயச்சித்தம் என்று தெரிந்துகொண்டு அதை செய்யலாம். அப்படி பண்ண முடியாவிட்டால் ஸ்வாமி தேசிகன் ந்யாஸ தசகத்தில் அருளிய “
அக்ருʼத்யாநாம் ச கரணம் க்ருʼத்யானாம் வர்ஜனம் ச மே I
க்ஷமஸ்வ நிகி2லம் தே3வ ப்ரணதார்தீஹர ப்ரபோ4 II
என்கின்ற இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால் அதுவே ஒரு ப்ராயச்சித்தம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top