ஸ்ரீவைஷ்ணவராக இருக்க வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் பற்றி பல “ஆஹ்நீக க்ரந்தங்களில்” கூறப்பட்டிருக்கிறது. யாராவது ஒரு பெரியவாளிடம் சம்பந்தப்பட்டு, ஸ்ரீ வைஷ்ணவ தினசர்யா போன்ற ஆஹ்னீக க்ரந்தங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ
ஸ்ரீவைஷ்ணவராக இருப்பவர்கள் முக்கியமாக செய்ய வேண்டியது சந்தியாவந்தனம். அதுமட்டுமல்லாது, நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளுதல், பெருமாள் திருவாராதனம் செய்தல், கோவிலுக்குச் சென்று பெருமாள் சேவித்தல் போன்றவைகளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள். மேலும், அடியேன் என்று சொல்லவேண்டும். இவையெல்லாம் ஒரு வைஷ்ணவனுடைய அடையாளங்கள். இவை எல்லாம் அந்தப் புஸ்தகங்களில் விளக்கமாக இருக்கும்.

