ஸ்த்ரீகள், துளசி மாலையை தரித்துக் கொள்ளும் வழக்கமில்லை.
நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், துளசி மாலையை ப்ரதிஷ்டை செய்த பிறகே தரித்துக்கொள்ள வேண்டும். அப்படி ப்ரதிஷ்டை பண்ணிய துளசிமாலைக்கு, நிறைய நியமங்கள் உண்டு. பூணூலை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்கின்றோமோ, அதேபோல் அசுத்தம் கலக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெரியோர்கள், ஆசார்யர்கள் எல்லோரும் ப்ரதிஷ்டை செய்த துளசி மாலையை அனுஷ்டானம் மற்றும் காலக்ஷேபம் சமயங்களில் தரித்துக் கொள்வார்கள்.