ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகள் துளசி மாலை (காந்தி மாலை) அணிந்துக்கொள்ளலாமா ? ISKCONல், துளசி மாலை அணிபவர்கள் மட்டுமே கைங்கர்யம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியேன் கைங்கர்யத்திற்கு அங்கு செல்வதால், நான் துளசி மாலை அணியலாமா? தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்.

ஸ்த்ரீகள், துளசி மாலையை தரித்துக் கொள்ளும் வழக்கமில்லை.
நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், துளசி மாலையை ப்ரதிஷ்டை செய்த பிறகே தரித்துக்கொள்ள வேண்டும். அப்படி ப்ரதிஷ்டை பண்ணிய துளசிமாலைக்கு, நிறைய நியமங்கள் உண்டு. பூணூலை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்கின்றோமோ, அதேபோல் அசுத்தம் கலக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெரியோர்கள், ஆசார்யர்கள் எல்லோரும் ப்ரதிஷ்டை செய்த துளசி மாலையை அனுஷ்டானம் மற்றும் காலக்ஷேபம் சமயங்களில் தரித்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top