தீபாவளி பண்டிகையை சாஸ்த்ரோக்தமாக எப்படி கொண்டாட வேண்டும். மேலும், மத்தாப்பு, பட்டாசு என்பது எல்லாம் காலமாற்றத்தினால் சேர்க்கப்பட்டதாக இருக்கும், என்ற எண்ணம் அடியேனுக்கு வெகு காலமாக இருக்கின்றது. நம் பெரியோர்கள் எப்படி கொண்டாடினார்கள். அடியேன் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

தீபாவளி பண்டிகையில் நாம் முக்கியமாக பண்ண வேண்டியது கங்கா ஸ்நானம். அதாவது, பிம்மாலை சூர்யோதயத்திற்கு முன் எழுந்து நலங்கிட்டு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வது முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானமாகும்.
அதற்கு மேல் எம்பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட புது வஸ்திரங்களை தரித்துக்கொண்டு, எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, பல வித பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் இவற்றை ஸமர்ப்பித்து பின் உட்கொண்டு கொண்டாட வேண்டும்.
பட்டாசுவெடிப்பது என்பதும் சாஸ்திரத்தில் ஒரு கொண்டாட்டமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இந்த அனுஷ்டானத்தை, காலங்காலமாக செய்து வருகின்றனர். எம்பெருமானுக்கு பெருமாள் சந்நிதியில் ஒரு மத்தாப்பைக் கொளுத்தி வழிபடுவது என்பது அனுஷ்டானத்தில் உள்ளது. அதனால் அதையும் அவசியம் பண்ணிக் கொண்டாட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top