தீபாவளி பண்டிகையில் நாம் முக்கியமாக பண்ண வேண்டியது கங்கா ஸ்நானம். அதாவது, பிம்மாலை சூர்யோதயத்திற்கு முன் எழுந்து நலங்கிட்டு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் ஸ்நானம் செய்வது முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானமாகும்.
அதற்கு மேல் எம்பெருமானுக்கு சமர்பிக்கப்பட்ட புது வஸ்திரங்களை தரித்துக்கொண்டு, எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, பல வித பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் இவற்றை ஸமர்ப்பித்து பின் உட்கொண்டு கொண்டாட வேண்டும்.
பட்டாசுவெடிப்பது என்பதும் சாஸ்திரத்தில் ஒரு கொண்டாட்டமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இந்த அனுஷ்டானத்தை, காலங்காலமாக செய்து வருகின்றனர். எம்பெருமானுக்கு பெருமாள் சந்நிதியில் ஒரு மத்தாப்பைக் கொளுத்தி வழிபடுவது என்பது அனுஷ்டானத்தில் உள்ளது. அதனால் அதையும் அவசியம் பண்ணிக் கொண்டாட வேண்டும்.