சாஸ்த்ரப்படி ஐந்தாம் நாள் அந்யா தீட்டு ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே வந்து காரியங்கள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் மனசு ஆப்யாயத்திற்கு எது உசிதமோ அப்படிச் செய்வதில் ஒன்றும் தவறு இல்லை.
உதாஹரணத்திற்கு பெருமாள் சன்னதியை சுத்தி செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது இதையெல்லாம் செய்வதற்கு மனது ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அந்த காரியங்களைச் செய்வதற்கு வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் விண்ணப்பித்துக்கொண்டு செய்யச் சொல்லலாம். அதில் ஒன்றும் பாதகமில்லை.
15 நாள் வரை சாஸ்த்ரப்படி அவர்கள் விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் 15 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்றால் 18 நாட்கள் வரை விழுப்பு போன்று கணக்கு. 18 நாட்களுக்கு மேல் மூன்று நாட்கள் மறுபடியும் விலகி இருக்க வேண்டும். சாஸ்த்ரப்படி இதுதான் வழக்கம்.
அதற்கு மேல் அவரவர்களுடைய குடும்ப சூழ்நிலை, ஒத்தாசைக்கு யாரேனும் இருக்கிறார்களா, இவற்றை எல்லாம் பொருத்து அவரவர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.