தர்ப்பணம் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு அர்த்தமானது வெற்றிலை பாக்கு போட்டு கொள்ளக்கூடாது என்பதாகும். இன்னொருவர் ஆத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற அர்த்தம் வராது.
தர்ப்பண தினத்தில் கல்யாண வீட்டிற்கு போகிறோமானால் அங்கு அவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு தாம்பூலம் சுபமானதாகும் அதை நாம் வாங்கிக்கொள்ளலாம். அதில் தோஷம் கிடையாது.
ஶ்ராத்த தினத்தை நாம் விசேஷமாக பார்க்க வேண்டும். வெளியில் பொதுவாக போகாத படி இருக்கலாம் போக நேர்ந்தால் தாம்பூலம் வாங்கலாம் தவறில்லை. ஆனால் தானமாக எதையும் அன்றைய தினம் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆகையால் மங்கலகரமான வெற்றிலை பாக்கு அவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம் சிறிது ஜாக்ரதையாக தானங்களை தவிர்த்தல் நலம்.