ஒரு வருடத் தீட்டு என்று கிடையாது, பத்து நாள் தீட்டு மட்டும் தான். ஒரு வருஷ தீக்ஷா என்று அதற்கு பெயர். அந்த தீக்ஷா காலத்தில் கர்தாவாக இருக்கக்கூடிய தம்பதிகள் இருவருமே தீர்த்தயாத்திரை பண்ணக்கூடாது. அதாவது வெளியில் தீர்த்தயாத்திரை செய்து அங்கங்கு இருக்கும் புண்ய நதிகளில் நீராடக் கூடாது. ஆனா நாம் போகும் இடத்தில் புண்ய நதி இருந்தால் அதில் நீராடலாம்.
உதாஹரணமாக நாம் ஒரு கார்யமாக ஸ்ரீரங்கம் போகின்றோம் என்றால் அப்போது காவேரியில் தீர்த்தாமாடினால் விசேஷம். அதே போல் வடக்கே கங்கையில் தீர்த்தாமாடினால் விசேஷம்.
தீர்த்தயாத்திரை என்றால் புண்ய க்ஷேத்ரங்கள் போகனும், புண்ய ஸ்நானங்கள் பண்ணனும் என்றே சங்கல்பமெல்லாம் செய்துக்கொண்டு பத்ரிகாஶ்ரமம் போன்ற யாத்திரைகள் செய்வார்கள். அது போன்ற யாத்திரைகள் பண்ணக்கூடாது என்று தான் இருக்கிறது.
மற்றப்படி நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யலாம் அது விசேஷம்.