மஞ்சள் சரடு மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. மாங்கல்ய சூத்திரம் என்று பெயர். “மாங்கல்ய தந்து” என்று கல்யாணங்களில் சொல்லும் ஸ்லோகங்களில் வரும். ஸ்வாமி தேஶிகனும் “மாங்கல்ய சூத்திரம் இவ” என்று சொல்லியிருக்கிறார்.
எப்படி மஞ்சள் சரடு மங்களகரமானது அதேபோல் ஸ்வர்ணமும் மிகவும் மங்களகரமானது தான். அதனால் சரடிற்கு பதிலாக ஸ்வர்ணம் ஏன் கூடாது என்று சமீப காலமாக கேள்வி எழுந்துள்ளது.
இது சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கும் ஒரு ப்ராசீனமான பழக்கம். அதனால் அதை நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. எப்படி புருஷர்களுக்கு யக்ஞோபவீதமோ கிட்ட தட்ட அதே போல் ஸ்த்ரீகளுக்கு மாங்கல்ய சூத்திரம், பிப்ரதி என்று ஸ்வாமி தேஶிகனும் கூறியுள்ளார். இதை எப்போதுமே தரித்திருக்க வேண்டும். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தோன்றுகிறது.