ஆளவந்தார் பண்ண ஸ்தோத்ரத்திற்கு “ஸ்தோத்ர ரத்னம்” என்று பெயர். ஜிதந்தே ஸ்தோத்ரம் அவர் பண்ணியது இல்லை. ஆளவந்தாருடைய ஸ்தோத்ரங்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஜிதந்தே ஸ்தோத்ரம் வேத புராணங்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதனால் அதில் சில நியமனங்கள் இருக்கலாம். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போல் அதுவும் ஸ்தோத்ரம் தானே என்று சிலர் சொல்வதுண்டு. சாஸ்த்ரங்களின் படி நியமமாக கடைபிடிக்கும் போது ஸ்த்ரீகள் இதைச் சொல்லக்கூடாது.