ஆத்து விக்ரஹங்களில் இரண்டு விதம் உண்டு. ப்ரதிஷ்டை ஆன விக்ரஹம். ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹம்.
ப்ரதிஷ்டை ஆன விக்ரஹத்தை ஸ்த்ரீகள் தொடக்கூடாது. புருஷர்களும் ரொம்ப நியமத்துடன் தொட வேண்டும்.
வெளியில் போய் விட்டு வந்த தீட்டுடன் தொடக்கூடாது. சாப்பிடாமல் தொடவேண்டும். காலையில் சுத்தமாக ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் பண்ணி சாப்பிடாமல் தொடவேண்டும் என்று நியமனங்கள் உண்டு.
ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹங்களாக இருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் திருமஞ்சனமோ, புது வஸ்த்ரங்கள் அணிவித்து அலங்காரமோ பண்ணலாம்.