மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிகள் ப்ரத்யேகமாக அநுஷ்டிக்க வேண்டிய வ்ரதம் எதுவும் கிடையாது. அந்த க்ருஹத்தில் மகாளய தர்ப்பணம் யாராவது பெரியோர்கள் பண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சகாயம் பண்ண வேண்டும். மஹாளயம் என்பது ஶ்ராத்தம் என்கின்றபடியினால் அப்படி சகாயம் பண்ணும் தினத்தில் ஶ்ராத்தத்திற்கு எப்படி சுத்தியோடு இருப்போமோ அப்படி இருக்க வேண்டும்.