த்வய மந்த்ர உபதேசத்தின் போது ஸ்த்ரீகள், ப்ரணவத்திற்கு பதிலாக உம் என்று உச்சரிக்க வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டேன். பல இடங்களில் ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ப்ரணவம் மந்திரத்தில் இருந்தால் ஸ்த்ரீகள் சொல்லுவதில்லை என்று நியமனம் சாஸ்த்ரத்தில் வைத்துள்ளார்கள்.
ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் நடுவில் அதாவது ஆயிரம் நாமாவில் கிடையாது. சில இடங்களில் சேர்த்துச் சொல்கிறார்கள் அது நாமே சேர்த்து சொல்வது என்பது மட்டும் தான். ஆகையால் அப்படிச் சொல்ல வேண்டுமென்ற நிர்பந்தமில்லை சொல்லாமலும் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top