அடியேன் தாய்வழி அத்தை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நியமிக்கப்பட்ட மடத்தின் அதிகாரியிடத்தில் இருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றுள்ளார், ஆனால் எந்த மந்திரமும் நினைவில் இல்லை, அவர் மீண்டும் வேறு ஆசார்யனை அணுகி ஸ்மாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் செய்துக்கொண்டு தான் மந்திரோபதேசம் பெற வேண்டுமா?

மந்திரங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள சுலபமான உபாயம் உண்டு. ஸமாஶ்ரயணம் திரும்பவும் பண்ணிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணலாம். அதைச் செய்தாலேயே மந்திரங்கள் எல்லாம் ஞாபகம் வந்துவிடும். அதனால் ஒரு ஸதாசார்யனை நாடி ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை காலக்ஷேபம் பண்ணலாம். ஸமாஶ்ரயணத்தில் சங்கு சக்கர லாஞ்சனத்தை மீண்டும் பொருத்திக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதில் தோஷம் ஒன்றும் இல்லை.
ஆனால் பரந்யாஸம் கண்டிப்பாக திரும்பவும் பண்ணிக் கொள்ள கூடாது. ப்ரம்மாஸ்த்ர ந்யாயப்படியினால் மீண்டும் பண்ணிக் கொண்டால் பலிக்காமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top