மந்திரங்களை ஞாபகப் படுத்திக்கொள்ள சுலபமான உபாயம் உண்டு. ஸமாஶ்ரயணம் திரும்பவும் பண்ணிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணலாம். அதைச் செய்தாலேயே மந்திரங்கள் எல்லாம் ஞாபகம் வந்துவிடும். அதனால் ஒரு ஸதாசார்யனை நாடி ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை காலக்ஷேபம் பண்ணலாம். ஸமாஶ்ரயணத்தில் சங்கு சக்கர லாஞ்சனத்தை மீண்டும் பொருத்திக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதில் தோஷம் ஒன்றும் இல்லை.
ஆனால் பரந்யாஸம் கண்டிப்பாக திரும்பவும் பண்ணிக் கொள்ள கூடாது. ப்ரம்மாஸ்த்ர ந்யாயப்படியினால் மீண்டும் பண்ணிக் கொண்டால் பலிக்காமல் போய்விடும்.