சாளக்கிராமங்களை நாம் வெளியில் ஏளச்செய்து செல்லும் போது, ஒரு மரப்பெட்டி என எதில் ஏளியிருக்கிறாரோ அதை ஒரு சால்வையாலோ அல்லது பட்டுத்துணியினாலோ நன்றாக சுத்தி 3, 4, 7 என்று வரும்படியாக சுற்றி ஓலைப்பெட்டியிலோ அல்லது அது போன்ற பெட்டியில் நாம் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.
பின் அங்கு போய் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்துவிட்ட பிறகு நித்யபடியான திருவாராதனத்தை தொடரலாம்.
குறிப்புகள்:
சில நேரங்களில் பெட்டியைச்சோதனை செய்யும் போது அந்த நபர் இதனுள் என்ன இருக்கின்றது என்றும் அதை எடுத்துக்காட்டச் சொல்லியும் கேட்பார்கள். அவர்களுக்கு அது என்ன என்று அறியும் உரிமை இருக்கிறது எனவும் கூறுவார்கள் வேறு வழியில்லாமல் நாம் அவர்களிடம் கொடுக்கும் படி நேரலாம், அதன் பின்னர் பெருமாளுக்கு பாலில் திருமஞ்சனம் செய்ய வேண்டியது.
இதற்குச் சிலர் கூறும் சாமாதானம்/வேறு வழி என்னவென்றால், சிலர் checkin luggage ஆக போடுகிறார்கள், ஆனால் அது அவ்வளவு ஸ்வாரஸ்யமாக இல்லை. சிலர் metal ஆக இருந்தால் தெரிகிறது ஆகையால் மரப்பெட்டியில் பெருமாளை ஏளச்செய்து நிறைய துணிகள் கொண்டு சுற்றிவிட்டால் தெரிவதில்லை என்கிறார்கள். முடிந்தவரை பெருமாளைச் சுத்தமாக ஏளப்பண்ணிக்கொண்டுச் செல்ல பார்க்கவேண்டும்.