துஷ்ட க்ஷத்ரியர்களைக் கொல்லுவதற்காக பரசுராம அவதாரம்.
அவர் காலத்தில் ஏகப்பட்ட ஏகப்பட்ட ராஜாக்கள், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ராஜா இருந்தார்காள். 10 ஊருக்கு ஒரு ராஜா என்பது போலெல்லாம் நிறைய ராஜாக்கள் இருந்தனர். அவர்கள் இஷ்டம் போல் க்ஷத்ரிய தர்மமெல்லாம் பின்பற்றாது தான் வைத்தது தான் சட்டம் என்று சொல்லி துஷ்டர்களாக பல பேர் பரவி இருந்தபோது அவர்களை எல்லாம் ஒழிக்க வேண்டிய நிலை இருந்தது.
உண்மையான நல்ல சூர்ய வம்சம், சந்திர வம்சத்தில் வந்த க்ஷத்ரியர்கள் எல்லாரும் தர்ம வழியில் பரிபாலனம் செய்து வந்தனர்.அவர்களை பரசுராமர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் க்ஷத்ரியர்கள் எனச் சொல்லிக்கொண்டு துஷ்டர்களாக கொடுங்கொல் ஆட்சி செய்து தர்மத்தைத் தழைக்கவிடாது செய்தவர்களை அழித்தார்.
இதற்கு விஸ்தாரமாக தயா ஶதகம் ஸ்லோகத்தில் இருக்கிறது, அந்த ஸ்லோகத்தின் அனுபவம் பெற கீழே உள்ள linkஐ click செய்யவும்.