அடியேன் வெளிநாட்டில் இருக்கும் பொழுது, சில நேரங்களில் வெவ்வேறு சமயத்தில் மாசப்பிறப்பு மற்றும் அமாவாசை அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது எந்தத் தேசம் வைத்து அடியேன் அனுஷ்டிக்க வேண்டும்.?தயவுசெய்து கூறவும்.

இவ்விஷயம் பற்றி தர்ம ஶாஸ்த்ரம் நமக்கு ஒன்றும் சொல்லவில்லை. பெரியவர்கள் எல்லோரும் கூடி இதற்கு இப்படித்தான் பண்ணவேண்டும் என்று தீர்மானம் சொல்லியிருப்பதாகவும் தெரியவில்லை. ஆகையால் அந்தந்தத் தேசத்தை அனுசரித்து செய்யலாம் என்னும்படியாகத் தோன்றுகிறது. சிலர் அவ்வாறாக செய்து வருகின்றனர். இது அடியேனின் அபிப்ராயம் மட்டுமே.
இந்தியாவிற்குள்ளேயே சில ஊர்களில் க்ரஹணம் உண்டு/இல்லை என்பதும், சூர்யோதயம் மற்றும் அஸ்தமன காலம் சில நேரங்களில் பெரியளவில் மாறுபடும். அப்போது அந்தந்த ஊரில் என்னவோ அதை வைத்துக்கொண்டுதான் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவிலேயே சென்ற வருடம் சங்கராந்தி வெவ்வேறு நாளில்தான் வந்தது. முதல் நாள் சில இடங்களிலும், மறுநாள் சில இடங்களில் என்னும் படியாக வந்தது. அந்த ரீதியில் அந்தந்தத் தேசத்தில் இருப்பவர்கள் அந்தந்தத் தேசத்தின்படி செய்வது உசிதமாக இருக்கும் என்னும்படியாகத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top